Sunday 5th of May 2024 12:40:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர் உள்ளிட்ட இருவருக்கு தொற்றுறுதி!

வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர் உள்ளிட்ட இருவருக்கு தொற்றுறுதி!


வவுனியாவில் இன்று மாலை வெளியாகியுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலையில் வவுனியா வடக்கு பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியாசாலை சிற்றூழியர் ஒருவருக்கும், நெஞ்சுவலி காரமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குமாக இவ்வாறு இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் னொரோனாத் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE